ராயல் கமிஷன் பஹிஷ்கார நாடகமானது இதுவரையில் தீர்மான ரூபங்களாகவும் தட்டிப்பேச ஆள் இல்லாத இடங்களில் மேடைப் பேச்சாகவும் இருந்து வந்ததானது இப்போது அதாவது பிப்பரவரி µ மூன்றாம் தேதியில் காரியத்தில் காட்டப்படப் போவதாக தெரிய வருகின்றது. அதாவது இம்மாதம் 15 தேதியில் காசியில் சர்வகக்ஷி பகிஷ்கார மகாநாடு என்பதாக ஒன்றுகூடி அகில இந்திய ஹர்ட்டால் (வேலை நிறுத்தம்) செய்வது என்பதாக தீர்மானங்கள் செய்திருப்பதாய் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது. அதை அனுசரித்து நாடெங்கும் வேலைநிறுத்தங்கள் செய்வதற்கு வேண்டிய பிரசாரங்களும் ஆங்காங்கு நடத்த முயற்சிகளும் செய்யப்படுவதாய் காணப்படுகின்றது.
பகிஷ்கார விஷயமாய் ஒவ்வொரு கக்ஷிக்காரர்களும் ஒவ்வொரு தலைவர்கள் என்பவர்களும் சொல்லிவந்த விஷயங்களை மறுத்து அதில் உள்ள புரட்டுகளை வெளியாக்கியும் எத்தனையோ கட்டுரைகள் எழுதியும் சொற்பெருக்குகள் பொழிந்தும் வந்திருந்தும் இதுவரை அவற்றில் ஒன்றுக்காவது சமாதானமோ பதிலோ இல்லாமல் தங்கள் வழக்கபடி புரட்டுகளையே பாமர மக்கள் ஏமாறும்படி எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் வருகிறார்களே ஒழிய மக்கள் உண்மையை அறிய இவர்கள் ஒரு சிறிதும் கவலை எடுத்துக் கொள்ளவில்லை.
பகிஷ்கார இயக்கங்களில் சேர்ந்த மந்திரி யாராவது அன்று சர்க்கார் வேலை பார்க்காமல் இருக்கப் போகிறார்களா? சட்டசபை மெம்பர்கள் சட்ட சபை நடந்தால் போகாமல் இருக்கப் போகிறார்களா? வக்கீல்கள் கோர்ட்டுக்குப் போகாமல் இருக்கப் போகிறார்களா? இதைப்பற்றி ஒரு தீர்மானத்தையும் காணோம். பின்னையோவென்றால் ஜட்கா வண்டிக்காரர்கள் வண்டிக் கட்டக் கூடாது என்பதும், வெற்றிலை பாக்கு பல சரக்குக் கடைக்காரர்கள் கடைதிறக்கக் கூடாது என்பதும் பலகார கடைக்காரர்கள் கடை வைக்கக்
அல்லாமலும் இவ்வேலை நிறுத்தம் வெற்றி பெற்று கமீஷனும் இத்தலைவர்களுக்கு வணங்கி இந்தியர்கள் யாரையாவது கமீஷனில் சேர்த்துக் கொள்ளவோ அல்லது இந்திய சுயராஜ்ஜிய நிர்ணயம் செய்ய இவர்களுக்கு பூரண அதிகாரமும் கொடுக்கவோ வசப்பட்டால் அதன் மூலம் இந்த வேலை நிறுத்தம் செய்த ஏழை மக்களுக்கு என்ன நன்மையுண்டாகும்படி இத்தலைவர்கள் திட்டம் போடக் கூடும் என்பதை யோசித்தால் இதன் புரட்டு வெளியாகாமல் போகாது.
இதுவரையில் பகிஷ்காரத்திற்குக் காரணம் எல்லாம் மூன்று விஷயங் கள்தான் முக்கிய தலைவர்கள் என்பவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதை முன்னும் எழுதியிருக்கிறோம்.
- இந்தியர்களை கமிஷனில் சேர்க்கவில்லை என்பது.
- இந்தியாவின் சுதந்திரத்தை நிர்ணயிக்க இந்தியர்களுக்கு அதிகாரமேயொழிய பார்லிமெண்டுக்கு இல்லை என்பது.
- ஆகையினால் இக் கமிஷன் நியமித்தது இந்தியாவின் சுயமரியாதைக்குப் பங்கம் என்பது.
இம்மூன்றையும் கூர்ந்து பார்த்தால் ஒன்றுக்கொன்று முரண்படக்கூடியது என்பது விளங்கும்.
தவிர இந்தியர்களில் யாரை நியமிப்பது என்பதும் பார்லிமெண்டாரால் இதுவரை இந்தியாவுக்கு நிர்ணயித்து வந்த சுதந்திரங்களை நாம் பகிஷ்கரித் தோமா? அல்லது இந்த சமயத்திலாவது பகிஷ்கரிக்க தயாராயிருக்கின் றோமா? என்பதும் முதல் இரண்டு விஷயங்களுக்குத் தக்க சமாதானமாகும்.
பகிஷ்கார தினத்தன்று தொண்டர்கள் கடமை
வேலைநிறுத்தம் காரியத்தில் நடைபெற ஏதாவது ஏற்பாடுகள் செய்வார்களானால் உத்தியோகப் பார்ப்பனர்கள் ஒவ்வொருவரும் இந்த வேலை நிறுத்தத்திற்கு அனுகூலமாக ஆங்காங்குள்ள பாமர மக்களை மிரட்டி வேலை நிறுத்தத்திற்கு உதவி செய்யக் கூடும் என்பதும் நமக்குத் தெரியும்.
ஆனாலும் ஆங்காங்குள்ள சுயமரியாதைத் தொண்டர்கள் இவ்வதிகாரிகளுக்குப் பயப்படாமல் ஒன்று சேர்ந்து முதல் நாளே ஒவ்வொரு கடைக்காரரிடமும், வண்டிக் காரரிடமும் போய் உண்மையைச் சொல்லி ஏமாறாமலிருக்கச் செய்ய வேண்டும். ‘குடி அரசு’ ‘நவசக்தி’ ‘திராவிடன்’ ‘குமரன்’ முதலிய பத்திரிகையிலும் இது விஷயமாய் வந்த வியாசங்களைப் பெயர்த்து துண்டு விளம்பரங்கள் அச்சிட்டு வழங்க வேண்டும். ஆங்காங்குள்ள முக்கிய தொண்டர்கள் தங்களது விலாசத்தை உடனே தெரிவித்தால் துண்டு விளம்பரங்கள் அனுப்பிக் கொடுக்கப்படும்.
தவிர ‘திராவிடன்’ ‘குடிஅரசு’ ‘குமரன்’ ‘நவசக்தி’ போன்ற பத்திரி கைகளுக்கு சந்தா சேர்க்க வேண்டும், பார்ப்பனப் பத்திரிகைகளையும் பார்ப்பனர்களுக்கு உள் உளவாயோ அல்லது அவர்களுக்கு பயந்து கொண்டோ பகிஷ்காரக் கூச்சலில் கலந்து கூட்டத்தில் கூப்பாடு போடும் பகிஷ்காரப் புரட்டுப் பத்திரிகைகளையும் பகிஷ்கரிக்கும்படி அறிவுறுத்த வேண்டும்.
(குடி அரசு - தலையங்கம் - 22.01.1928)