நாளது அக்டோபர் 19 - தேதியின் சுதேசமித்திரனில் ‘ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு ஒரு மறுப்பு’ என்னும் தலையங்கத்தின் கீழ் ஈரோடு சேர்மென் ஸ்ரீமான் ஸ்ரீநிவாச முதலியாரவர்களுடைய கடிதம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஸ்ரீமான் நாயக்கர், ஸ்ரீமான் ஸ்ரீநிவாச முதலியாரவர்களைப் பற்றி எழுதியிருந்ததற்குப் பதில் அனுப்பி பிரசுரம் செய்யும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஸ்ரீமான் நாயக்கர் அப்படிச் செய்ய வில்லையென்றும் ஸ்ரீமான் முதலியார் எழுதியிருக்கிறார். அது உண்மைக்கு விரோதமானது. ஸ்ரீமான் முதலியார் ‘குடி அரசு’க்கு எழுதிய மறுப்பில் ஸ்ரீமான் நாயக்கருக்கும் தனக்கும் பழைய விரோதமிருப்பதாகக் குறிப்பிட்டு சில விஷயங்கள் எழுதியிருந்தார்.
அவ்விரோதத் தன்மையைப் பொறுத்தவரை விவகரிக்காமல் நிறுத்தி விட்டு அவர் மறுத்த விஷயத்திற்கு மாத்திரம் அவருடைய மறுப்பையும் அவற்றிற்குச் சமாதானத்தையும் முறையே வெளியிடத் தீர்மானித்தே ஸ்ரீமான் முதலியார் பொய்யென்று மறுத்த மூன்று முக்கிய விஷயங்களை அப்படியே எடுத்தெழுதி அவற்றிற்கு சமாதானம் தக்க ஆதாரத்துடனும் தேதி கையெழுத்து முதலியதுகளுடனும் எழுதிவிட்டு இவற்றையும் ஸ்ரீமான் முதலியார் மறுக்கிறாராவென்று குறிப்பும் எழுதி அதன் பதில் வந்த உடன் மற்றும் முதலியாரின் மறுப்பை வெளியிடுவதாகவும் எழுதியிருந் தோம், அதற்கு உண்டு, இல்லை என்ற இரண்டிலொரு விஷயத்தை எழுதா மல் ஸ்ரீமான் நாயக்கர் பேரில் குற்றஞ் சொல்லிக்கொண்டு ‘மித்திரனை’ அபயங் கொண்டதின் கருத்து நமக்கு விளங்கவில்லை. ஆனபோதிலும் ‘மித்திரன்’ அதைப் பிரசுரித்திருப்பதைப் பற்றி நாம் மிகவும் திருப்தியடை கிறோம். ஏனெனில் இதன் மூலம் ‘குடிஅரசு’ பத்திரிகையோ அல்லது நாயக்கரோ உண்மை பேசுகிறார்களா? அல்லது ஸ்ரீமான் முதலியாரைப் பற்றி வேண்டுமென்றே பழி கூறுகிறார்களா? என்பது வெளியாக மற்று மொரு சந்தர்ப்பம் கிடைத்த தல்லவா என்கிற சந்தோஷம்தான். ‘மித்தி ரனில்’ பிரசுரித்த ஸ்ரீமான் முதலியா ரவர்கள் மறுப்பில் முன்பாகம் மூன்று விஷயங்களைக் கொண்டிருக்கிறது. அவையாவன:-
2. இது விஷயமாய் ஒரு கவுன்சிலர் தன்னை கேள்வி கேட்டதாய் சொல்லுவதும் பொய்.
3. மற்றொரு கவுன்சிலர் கணக்குப் பார்க்க வேண்டிக் கொண்டார் என்று சொல்லுவதும் பொய்.
என்று எழுதிவிட்டு மற்றும் சில விஷயங்களுக்கு நீண்ட சமாதா னங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஸ்ரீமான் முதலியார் பொய்யென்று சொல்லும் மூன்று விஷயங்களுக்கும் ‘குடி அரசு’ தனது 10.10.26 தேதி இதழில் பதில் எழுதியிருக்கிறது. அதாவது,
2. இதைப்பற்றி கவுன்சிலரும் கேள்வி கேட்கவில்லை என்பதற்குச் சமாதானம் அப்போது கவுன்சிலராயிருந்த ஸ்ரீமான் நு.ளு.கணபதி ஐயர் அவர்கள் சேர்மன் அவர்கள் தன் பேருக்கே செக் எழுதி 700 ரூபா அட் வான்ஸ் என்று எடுத்துக் கொண்டது உண்மையா? அப்படியானால் அதை ஏதாவது ஒரு கவுன்சில் தீர்மானத்தை முன்னிட்டு எடுத்துக் கொண்டதா? அல்லது கவுன்சில் தீர்மானத்தை எதிர்பார்த்து என்றெடுத்து பின்னால் சரிசெய்து விடலாமென்றா? என இம்மாதிரி பல கேள்விகள் (இன்டர் புலே ஷன்கள்) எழுதி சேர்மனுக்கனுப்பி இதற்கு வரவு தேதி போட்ட ரசீதும் வாங்கியிருக்கிறார். அதன் நகலும் பிரசுரிக்க நமக்கனுப்பி இருக்கிறார். இதற்கு நாளது வரை சேர்மனால் யாதொரு பதிலும் அளிக்கப்படவே யில்லை.
இவற்றை ஸ்ரீமான் முதலியார் அவர்கள் உண்மை யென்றோ அல்லது கற்பனை என்றோ சொல்லாமல் நாயக்கர் மீதும் ‘குடி அரசு’ மீதும் குற்றம் சொல்லி வீண்பழி சுமத்துவது தர்மமாகுமா?
தவிர, சேர்மனின் இம்மாதிரியான நடவடிக்கையின் பலனாகவும் அரசாங்கத்தார் இவற்றை அனுமதித்து வருவதன் பலனாகவும் பொறுப்புள்ள அதாவது வருஷம் 1000, 2000 ரூ. இன்கம்டாக்ஸ் செலுத்துகிற கவுன் சிலர்களும் வருஷம் 2000, 3000 ரூபாய் சர்க்கார் கந்தாயம் செலுத்துகிற கவுன் சிலர்களும் சர்க்காரால் நியமிக்கப்பட்ட பென்ஷன் தாசீல்தார் போன்ற கவுன் சிலர்களும் ஆக 12 பேர் தங்கள் கவுன்சிலர் பதவியை ராஜினாமா கொடுத்து விட்டு வெளியிலும் வந்து விட்டார்கள். இதோடு மாத்திர மல்லாமல் ஈரோடு வக்கீல் சங்கத்தார் ஒன்று கூடி தங்கள் சங்கத்தின் மூலம் ³ 12 கவுன்சிலர்கள் ராஜினாமா கொடுத்ததைப்பற்றிக் கவலை எடுத்துக் கொண்டு முனிசிபல் நிர்வாகத்தைத் திருத்தவும், இப்பேர்ப்பட்ட குற்றங் களுக்கு இடமில்லாமல் சரிவர நடத்தவும், வக்கீல் சங்கத்தார் முயற்சியெடுத் துக்கொள்ள வேண்டு மென்று ஒரு தீர்மானமும் கொண்டு வந்தார்கள். அந்த வக்கீல் சங்கத்துக்கும் ஸ்ரீமான் ஸ்ரீநிவாச முதலியாரவர்களே பார்ப்பன ரல்லாதார் என்கிற சலுகையின் பேரில் தலைவராயிருக்க நேர்ந்தமையால் இத்தீர்மானத்தை தலைவர் முறையில் நிராகரித்தும், அவரில்லாமலே உப தலைவரைக் கொண்டு வக்கீல் சங்கக் கூட்டம் கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி ராஜினாமா செய்யப்பட்ட கவுன்சிலர் ஸ்தானத்துக்கு சங்கத்தின் சார்பாய் ஒரு வக்கீலை யும் நிறுத்தி சேர்மெனின் இவ்வித நடவடிக்கைகளை பொதுஜனங்களுக்கு எடுத்துச் சொல்லி வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
குடி அரசு - கட்டுரை - 24.10.1926